தமிழ் மதம் எனில், தமிழுக்கும் ஆற்றும் சேவையே தவம் என்ற நெறியின் கீழ் வாழும் தமிழ்ப் பற்றாளர். இவருக்கும் தமிழுக்குமான உறவு, உயிருக்கும், மெய்க்கும் இணையானது. தமிழை தன் எழுத்தின் பல பரிமாணங்களில் ஆராதிப்பவர், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என தொடர்ந்து இயங்கும் இவருக்கு “கவி இளவரசர்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறது அறம் வழி அறக்கட்டளை. எழுத்துக்கலை மட்டுமல்லாது பேச்சுக்கலையிலும் தன் தமிழ் ஆளுமையை செலுத்தம் இவர், பட்டிமன்ற பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகங்களில் தமிழ்ப் பணியே தலையாயது என வாழுபவர் நம் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் திருமதி பாக்கியலட்சுமி. இவரது படைப்புகள் சில: சிந்திக்க சில (க) விதைகள் சிறகடித்த சிறுகதைகள் Short Autobiography of Bharathi(listed in Montville Middle School Library)
முத்தமிழ் பள்ளியின் துணை முதல்வர்.
முத்தமிழ் பள்ளியின் எங்கள் குழு ஆசிரியர்கள், மாணவர்களின் வளர்ச்சிக்காக நேர்மையும் தன்னிறைவுடனும் பாடுபடுகின்றனர்.
வாழ்க்கைமுறை கல்வியையும் சமூகப் பொறுப்பையும் வளர்க்கும் பணி எங்கள் நோக்கம்.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் கற்றல் முறைகள் எங்களின் முதன்மையான கவனம்.
முத்தமிழின் செழுமையை வளர்க்கும் விதமாக மொழி, கலாச்சாரம், அறிவியல் இணைந்த பாடங்களை அளிக்கிறோம்.
மாணவர்களின் வெற்றியே எங்கள் பள்ளியின் பெருமை!