முத்தமிழ்ப் பள்ளி முதல்வர்

திருமதி. பாக்கியலட்சுமி

தமிழ் மதம் எனில், தமிழுக்கும் ஆற்றும் சேவையே தவம் என்ற நெறியின் கீழ் வாழும் தமிழ்ப் பற்றாளர். இவருக்கும் தமிழுக்குமான உறவு, உயிருக்கும், மெய்க்கும் இணையானது. தமிழை தன் எழுத்தின் பல பரிமாணங்களில் ஆராதிப்பவர், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என தொடர்ந்து இயங்கும் இவருக்கு “கவி இளவரசர்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறது அறம் வழி அறக்கட்டளை. எழுத்துக்கலை மட்டுமல்லாது பேச்சுக்கலையிலும் தன் தமிழ் ஆளுமையை செலுத்தம் இவர், பட்டிமன்ற பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகங்களில் தமிழ்ப் பணியே தலையாயது என வாழுபவர் நம் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் திருமதி பாக்கியலட்சுமி. இவரது படைப்புகள் சில: சிந்திக்க சில (க) விதைகள் சிறகடித்த சிறுகதைகள் Short Autobiography of Bharathi(listed in Montville Middle School Library)

முத்தமிழ்ப் பள்ளி துணை முதல்வர்

துணை முதல்வர்

முத்தமிழ் பள்ளியின் துணை முதல்வர்.

எங்கள் ஆசிரியர் குழு

முத்தமிழ் பள்ளியின் எங்கள் குழு ஆசிரியர்கள், மாணவர்களின் வளர்ச்சிக்காக நேர்மையும் தன்னிறைவுடனும் பாடுபடுகின்றனர்.
வாழ்க்கைமுறை கல்வியையும் சமூகப் பொறுப்பையும் வளர்க்கும் பணி எங்கள் நோக்கம்.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் கற்றல் முறைகள் எங்களின் முதன்மையான கவனம்.
முத்தமிழின் செழுமையை வளர்க்கும் விதமாக மொழி, கலாச்சாரம், அறிவியல் இணைந்த பாடங்களை அளிக்கிறோம்.
மாணவர்களின் வெற்றியே எங்கள் பள்ளியின் பெருமை!

திரு.வேணுகோபால்

திரு.வேணுகோபால்

மகனதிகாரத்தின் முதிர்ச்சியோடு மகளதிகாரத்திற்கு முன்னுரை எழுதும் தந்தை. இவரின் மொழியாளுமையும் கற்பிப்பதில் கொண்ட ஆர்வமும் மாணவர்களை வழிநடத்தும் அணுகுமுறைகளும் சிறந்த ஆசிரியராகவும் இவரை பிரதிபலிக்கச் செய்கின்றது.
திரு. சரவணகுமார்

திரு. சரவணகுமார்

தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் . உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படிக்கவேண்டும் என்பது இவர் லட்சியம். ஒரு சிறந்த வாசகர் சிறந்த ஆசிரியராகவும் இருப்பார் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஈடுபாட்டோடு கற்பிப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
திரு. நாகசுப்ரமணியம்

திரு. நாகசுப்ரமணியம்

தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டவர். மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் சிறப்பாக செயலாற்ற உதவுபவர். வகுப்புகளை மாணவர்களுக்கு பிடித்த முறையில் சுவாரசியமாக கொண்டு செல்பவர்.
திரு. பாக்கீஸ்வரன்

திரு. பாக்கீஸ்வரன்

மாணவர்களைப் புதிய யுக்திகளைக் கொண்டு அணுகுபவர். தமிழை மாணவர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் கற்பிப்பவர். செல்லப் பிராணிகளி்டம் மிகுந்த அன்பு கொண்டவர்.
திரு. அருஞ்சுனை தினேஷ்

திரு. அருஞ்சுனை தினேஷ்

மாணவர்களிடம் அன்போடும் பொறுமையோடும் அணுகுபவர். புன்னகை மற்றும் பொறுமையே வாழ்வை சிறப்பாக்கும் என்ற நம்பிக்கையே இவரை எப்போதும் புன்னகையோடு வலம் வர செய்கிறது. ஒரு ஆசிரியரின் புன்னகை மாணவர்களின் புன்னகைக்கும் காரணமாகிறது.
திருமதி. சுகுணா

திருமதி. சுகுணா

மாணவர்களிடம் நம்பிக்கையை விதைப்பவர். தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதிக வேலைப்பளுவிற்கு இடையிலும் தவறாமல் தமிழ்ப்பள்ளிக்கு ஆர்வத்துடன் தன் நேரத்தை ஒதுக்குபவர்.
திருமதி. ரதி

திருமதி. ரதி

குழந்தைகளுடன் இருப்பதை விரும்பும் இவர் அனுபவம் நிறைந்த தமிழாசிரியர். பட்டிமன்றங்களில் ஆர்வத்தோடு பங்கு பெறுபவர். தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட இவர் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவர்.
திருமதி. அபர்ணா

திருமதி. அபர்ணா

குழந்தைகளுடன் இருப்பதை விரும்புபவர். தமிழ் மொழியின் மீது பற்றுக்கொண்டவர். நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எந்த ஒரு செயலையும் அர்ப்பணிப்புடனும் தனித்துவமான அணுகுமுறையுடனும் கையாள்பவர்.
திருமதி. சௌஜன்யா

திருமதி. சௌஜன்யா

முன் மழலை வகுப்பின் ஆசிரியை மழலையருடன் தாமும் ஒரு மழலையாய் மாறி வகுப்பினை கையாள்பவர். ஓவியம் , இசை , நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.பட்டிமன்றப் பேச்சாளர் பல துறைகளில் இவர் முத்திரை பதித்தாலும் தமிழ் ஆசிரியை என்பதில் பெருமை கொள்பவர்.
திருமதி. சிவரஞ்சனி

திருமதி. சிவரஞ்சனி

முன் மழலை ஆசிரியையான இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பினும் மூன்று தலைமுறை ஆசிரியர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை விரும்புபவர். அனைவரிடமும் இனிமையாக பழகுபவர். குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்பவர்.
திருமதி. தமிழ்ச்செல்வி

திருமதி. தமிழ்ச்செல்வி

முழு நேர ஆசிரியையான இவர் கற்பித்தலில் மகிழ்பவர். தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல பட்டிமன்றங்களில் பங்கு பெற்றுள்ளார். மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் அன்போடு கற்றுக்கொடுப்பவர்
திருமதி. பாக்கியா

திருமதி. பாக்கியா

தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
திருமதி. சுதா

திருமதி. சுதா

இவர் கற்பித்தலில் மகிழ்பவர். தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டவர். மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் அன்போடு கற்றுக்கொடுப்பவர்
திருமதி. மோகனா

திருமதி. மோகனா

முன் மழலை ஆசிரியையான இவர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை விரும்புபவர். அனைவரிடமும் இனிமையாக பழகுபவர். குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்பவர்.
திருமதி. தீபப்ரியா

திருமதி. தீபப்ரியா

தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
திருமதி. ஆர்த்தி

திருமதி. ஆர்த்தி

இவர் கற்பித்தலில் மகிழ்பவர். தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டவர். மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் அன்போடு கற்றுக்கொடுப்பவர்
திருமதி. சங்கீதா

திருமதி. சங்கீதா

இவர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை விரும்புபவர். அனைவரிடமும் இனிமையாக பழகுபவர்.
திருமதி. அம்பிகா

திருமதி. அம்பிகா

தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.